×

கே.என்.நேரு திறந்து வைத்தார் துவரங்குறிச்சி அருகே வீட்டில் 20 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் திருட்டு

மணப்பாறை, ஜன.29: துவரங்குறிச்சி அருகே வீட்டை திறந்து 20 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகேயுள்ள வடக்கம்பட்டியை சேர்ந்தவர் அழகி. நேற்று முன்தினம் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு மாலை வீடு திரும்புகையில், பின் கதவை திறந்து வீட்டில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து அழகி, துவரங்குறிச்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : KN Nehru ,house ,Tuvarankurichi ,jewelery ,
× RELATED தொடர்ந்து தமிழகத்திற்கு வரும்...