×

சிறுமி கடத்தல் வாலிபர் போக்சோவில் கைது

தா.பேட்டை, ஜன.29: தா.பேட்டை அடுத்த ஜெம்புநாதபுரம் திருத்தலையூரில் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டிலிருந்த சிறுமி திடீரென மாயமானார். இது குறித்து பெற்றோர் ஜெம்புநாதபுரம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அவரது மகளை தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில் திருப்பூர் அருகே ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்த ஜீவா(19) என்ற வாலிபர், அந்த சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தேடி இருவரையும் கண்டுபிடித்து ஜெம்புநாதபுரம் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து வாலிபர் ஜீவாவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Tags : Girl kidnapper ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு