×

வயலூரில் திரளான பக்தர்கள் தரிசனம் டெல்லியில் விவசாயிகள் மீது தாக்குதல் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஜன.29: வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் போராட்டத்தை முறியடிக்கும் வகையில், டெல்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான கொடூர தாக்குதலை கண்டித்து திருச்சி பாலக்கரையில் நேற்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மண்டல ஒருங்கிணைப்பாளர் ெசழியன் தலைமை வகித்தார். இதில் தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு, ஜனநாயக சமுதாய கூட்டமைப்பு, தொழிலாளர் கூட்டமைப்பு, தமிழ் புலிகள் அமைப்பு, மக்கள் உரிமை கழகம், புரட்சிகர மாணவர் இளைஞரணி அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். இதில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அயிலை.சிவசூரியன் தலைமையில் விவசாயிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : Crowds ,devotees ,protest ,attack ,Vayalur ,Trichy ,Delhi ,
× RELATED உத்திரமேரூர் வேணுகோபாலசாமி கோயிலில்...