×

வணிகர்கள் கோரிக்கை திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொருக்கை ஊராட்சியில் பிரதம மந்திரிவீடு கட்டும் திட்டம்

திருத்துறைப்பூண்டி, ஜன.29: திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொருக்கை ஊராட்சியில் தமிழக அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ் கட்டிமுடிக்கப்பட்டஒரு வீட்டை கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார்.முன்னதாக, தமிழக அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தனை பற்றி பொதுமக்களிடம் முழுமையாக எடுத்து கூறி, இத்திட்டத்தின் மூலம் வீடுகட்டி பயனடையலாம் என்றார். மேலும் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையினை வழங்கி வீடு கட்டுவதற்கு அடிக்கல்லை கலெக்டர் நாட்டினார். இதில்உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர் ஜெகதீசன், ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன், ஒன்றிய கவுன்சிலர் வேதரத்தினம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Merchants ,Thiruthuraipoondi Union ,House ,
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...