×

 சுயதொழில் வேலைவாய்ப்பில் அதிக லாபம் தரும் முத்துப்பேட்டையில் கற்போம் எழுதுவோம் மையம் உதவி திட்ட அலுவலர்ஆய்வு

திருத்துறைப்பூண்டி, ஜன.29: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் கோவிலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இயங்கி வரும் கற்போம் எழுதுவோம் திட்ட மையத்தை, திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆய்வு செய்து கற்றலை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்கினார். மேலும் கொரோனா தடுப்பு, முன்னெச்சரிக்கை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேசினர்.
இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், ஆசிரியர்கள் பாலசுப்பிரமணியன், செல்வராசு, வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்தண்ணா, கோவிலூர் நடுநிலைப் பள்ளியின் தன்னார்வ ஆசிரியை தமிழரசி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...