×

தைப்பூச விழாவையொட்டி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

திருவாரூர், ஜன.29: தைப்பூச விழாவினையொட்டி திருவாரூர் முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். தைப்பூச விழாவையொட்டி நேற்று மாநிலம் முழுவதும் முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனையொட்டி திருவாரூர் கீழ வீதியில் இருந்து வரும் பழனி ஆண்டவர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் முருகன் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி காட்சியளித்தார். இதேபோல் வடக்கு வீதியில் அமைந்துள்ள பழனி ஆண்டவர் கோயில், கோயில் கந்தன்குடி சுப்பிரமணியசுவாமி கோயில், எண்கண் சுப்ரமணியசுவாமி கோயில் உட்பட பல்வேறு முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் இந்த தைப்பூசத்தையொட்டி அரசு விழா அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 10 மாதங்களுக்கு பிறகு தற்போது கோயில்களில் இதுபோன்ற விழா நடைபெற்றதால் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் முருகப்பெருமானை வழிபட்டனர்.

Tags : Murugan Temple ,occasion ,
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...