தஞ்சை, ஜன.29: தஞ்சை கரந்தை குதிரைக்கட்டித் தெருவில் மத்திய மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. தஞ்சை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், ஒரத்தநாடு எம்.எல்.ஏ.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏ ராஜன், தலைமை கழக பேச்சாளர் பெரம்பலூர் விசயரத்னம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்வம், இறைவன், நாகராஜன், ஜித்து, காரல்மார்க்ஸ், இறை.கார்குழலி உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கார்த்திக் நன்றி கூறினார்.