×

தா.பழூர் பகுதி கோயில்களில் தை பூச திருவிழா

தா.பழூர்,ஜன. 29: அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோயிலில் தை பூச திருவிழாவை முன்னிட்டு தைப்பூச வழிபாடு சிறப்பாக நடைபெற்றது . விஸ்வநாதர் , விசாலாட்சி அம்மன் மற்றும் பிரகாரத்தில் வீற்றிருக்கும் வள்ளி தேவசேனா சமேத வில்லேந்தி வேலவருக்கு தைப்பூசத்தை முன்னிட்டு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, வில்வப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தணம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது . பின்னர் வில்லேந்தி வேலவர் வண்ணமிகு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து காட்சி தந்தார். நிகழ்ச்சிக்கு சைவ பிள்ளைமார் மரபினர் ஏற்பாடு செய்தனர். இதுபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்திரநாயகி அம்மன் உடனுரை பசுபதீஸ்வரர் கோயில், கோடாலிகருப்பூர் மீனாட்சி அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் கோயில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களிலும் தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்வாமி அம்பாள், முருகப்பெருமானுக்கு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Tags : Thai ,temples ,Pooja Festival ,Dhaka ,
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...