×

ஜெயங்கொண்டம், பாடாலூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம், ஜன.29: திண்டுக்கல் அபிராம சுந்தரி உடனுறை பத்மகிரீஸ்வரர் ஆலயத்தில் தைப்பூச பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் சென்ற இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்தை கைது செய்ததை கண்டித்து ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் மனோகர் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மாவட்ட துணை தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் இந்து முன்னணி அமைப்பின் கோட்ட செயலாளர் குணசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செல்வகுமார், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கதிரேசன், நகர செயலாளர் லெட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : protests ,Jayangondam ,
× RELATED ஜெயங்கொண்டம் எம்எல்ஏ அலுவலகத்திற்கு சீல் வைப்பு