×

திரளான பக்தர்கள் தரிசனம் வேளாங்கண்ணி அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது

நாகை, ஜன. 29: வேளாங்கண்ணி அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி வடக்கு மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (33). கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியனை கொலை செய்வதாக மிரட்டியதாக இளையராஜா மீது கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 25ம் தேதி அவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரை நேற்று கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருப்பூண்டியில் ஓட்டல் தொடங்குவதற்காக இளையராஜா தனது தந்தை சுப்பிரமணியனிடம் பணம் கேட்டார். பணம் இல்லாததால் வீட்டில் இருந்த நகையை அவரது தந்தை கடந்த 24ம் தேதி கொடுத்தார். அந்த நகையை அடகு வைத்து விட்டு வீட்டுக்கு இளையராஜா வந்தார். அப்போது அவரை வழிமறித்து விழுந்தமாவடி வடக்கு மணல்மேடு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த முனியப்பன் (23), அவரது நண்பர்கள் அருள் (21), சுரேஷ் ஆகியோருடன் சேர்ந்து இளையராஜாவை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் முனியப்பனின் தங்கையை திருமணம் செய்து கொடுப்பதில் இளையராஜாவுக்கும், முனியப்பனுக்கு முன்விரோதம் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த முனியப்பன், தனது நண்பர்களுடன் சேர்ந்து இளையராஜாவை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து முனியப்பன், அருள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய சுரேஷை தேடி வருகின்றனர்.

Tags : persons ,murder ,Velankanni ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...