×

தைப்பூச விழாவையொட்டி வெண்ணைமலை முருகன் கோயிலில் தேரோட்டம்

கரூர், ஜன.29:தைப்பூசத்தை முன்னிட்டு கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணியன் உட்பட மாவட்டத்தில் மூன்று முருகன் கோயில்களில் நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. கரூர் வெண்ணைமலையில் உள்ள பாலசுப்ரமணியன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு துவங்கிய தேரோட்டம் 6.30க்கு கோயில் வளாகத்தை சுற்றி மீண்டும் நிலையை அடைந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா... அரோகரா... என்ற கோஷங்களுடன் வடம் பிடித்து தேர் இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், க.பரமத்தி அடுத்த பாலமலை பாலசுப்ரமணி கோயிலிலும் நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. மேலும், வேலாயுதம்பாளையம் புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலிலும் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தைப்பூசத்தையொட்டி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

Tags : Therottam ,occasion ,festival ,Vennamalai Murugan Temple ,
× RELATED குளித்தலை அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம்