கடவூர், ஜன.29: தரகம்பட்டி அருகே உள்ள வையாளிமடையில் செல்வ விநாயகர், மாரியம்மன், காளியம்மன், கருப்பண்ணசாமி கோயில்கள் உள்ளன. இக்கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக காவிரியில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு முதல் கால பூஜை நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் கால பூஜை நடத்தப்பட்டு கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோயில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து செல்வ விநாயகர், மாரியம்மன், காளியம்மன், கருப்பண்ணசாமி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.