அரவக்குறிச்சி, ஜன.29: அரவக்குறிச்சி அருகே கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மொபட்டில் சென்ற டெய்லர் கார் மோதி பலியானார். அரவக்குறிச்சி அடுத்த காமக்காபட்டியை சேர்ந்தவர் அர்ஜுனன் (52). தையல் தொழிலாளி. இவர் தனது மகள் ரஞ்சிதாவுடன் (24) நேற்று முன்தினம் அரவக்குறிச்சி அடுத்த ஆண்டிபட்டிக்கோட்டைக்கு மொபட்டில் சென்றார். திண்டுக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் காமக்காபட்டி பிரிவு அருகே சென்றபோது சேலத்திலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்தனர். இதில் அர்ஜுனன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைக்கு பலனின்றி நேற்று உயிரிழந்தார். மகள் ரஞ்சிதா கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.