×

பெண்ணை தாக்கி 15 சவரன் அபேஸ் மர்மநபருக்கு வலை

திருத்தணி:   திருத்தணி அடுத்த கேஜி கண்டிகை இருளர் காலனியை சேர்ந்தவர் பழனி (52) இவரது மனைவி கல்யாணி (48). நேற்று முன்தினம் இரவு கல்யாணி, திருத்தணியில் உள்ள உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தனது மொபட்டில் சென்றார். பின்னர், நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். கல்யாணியை, பைக்கில் பின் தொடர்ந்து வந்த மர்மநபர், அவரது வீட்டின் அருகே சென்றபோது, திடீரென அவரது மொபட்டை மறித்து, கல்யாணியை சரமாரியாக தாக்கினார். பின்னர், அவரது கழுத்தில் இருந்த 15 சவரன் நகையை பறித்துக் கொண்டு சோளிங்கர் நோக்கி மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். தவலறிந்து திருத்தணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கல்யாணியை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்

Tags : abbey ,
× RELATED திருவள்ளூர் அருகே மூதாட்டியிடம் செயின் அபேஸ்: மர்ம நபர்களுக்கு வலை