×

லுங்கியில் தீப்பற்றி நோயாளி சாவு

ஆவடி: சிகரெட் பற்ற வைத்தபோது, தீக்குச்சி தவறி நைலான் லுங்கியில் விழுந்ததில், பக்கவாத நோயாளி, உடல் கருகி பலியானார்.  சென்னை அடுத்த ஊரப்பாக்கம் முத்துவேல் நகர், 12வது தெருவை சேர்ந்தவர் அம்பிகாபதி (51). கார் டிரைவர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அம்பிகாபதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பின்னர், அவர் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், அம்பேத்கர் நகர், தென்றல் நகர் மெயின் ரோட்டில் வசிக்கும் மகள் வீட்டில் தங்கினார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி அம்பிகாபதி, வீட்டின் வெளியே நின்று சிகரெட் பற்ற வைத்தார். அப்போது, தீப்பெட்டியில் குச்சியை உரசியபோது, தீக்குச்சி தவறி அவரது நைலான் லூங்கியில் விழுந்தது. இதில், தீப்பற்றி எரிந்து அவரது 2 கால்கள், வலது கையில் படுகாயமடைந்தார். அவரது உறவினர்கள், அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அம்பிகாபதி நேற்று இறந்தார். புகாரின்படி திருமுல்லைவாயல் இன்ஸ்பெக்டர் ஷாம்வின்சென்ட் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்.

Tags : Patient ,
× RELATED உலக நோயாளிகள் தினத்தை முன்னிட்டு...