×

குடிநீர் வழங்கக் கோரி பெண்கள் சாலை மறியல்

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே குடிநீர் வழங்கக் கோரி பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். சிங்கம்புணரி அருகே காளாப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய பாலம், வி.நகர் ஆகிய பகுதியில் கடந்த சில மாதங்களாக குடி தண்ணீர் வரவில்லை. பெரிய பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி மற்றும் புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நெடுஞ்சாலைத்துறையினர் இப்பகுதிகளுக்குச் செல்லும் குடிநீர் இணைப்பை துண்டித்து உள்ளனர். இதனால் இப்பகுதியில் வசிக்கும் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தண்ணீரின்றி கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.  இதனால் நேற்று மதியம் அப்பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் திண்டுக்கல்-காரைக்குடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த எஸ்.வி.மங்கலம் போலீசார் பெண்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்….

The post குடிநீர் வழங்கக் கோரி பெண்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Singhamburi ,Kadapur Piravalam ,Dinakaran ,
× RELATED இனிமையான வாழ்க்கைத்துணை தரும் திருமணப் பொருத்தம்