×

தவறான சிகிச்சையால் நாய் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை கோரி பெண் வழக்கு: கால்நடைத்துறை இயக்குனர் பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், மணவூரை சேர்ந்த சுமதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எனது 9 வயது ஜெர்மன் ஷெப்பர்டு நாய்க்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், கடம்பத்தூர் கால்நடை மருத்துவரிடம் சிகிச்சை அளித்தேன். அவர் அளித்த மருந்தை சாப்பிட்ட நாய், கோமா நிலைக்கு சென்று விட்டது. பின்னர் நாயை பரிசோதித்த வேப்பேரி கால்நடை மருத்துவமனை மருத்துவர், தவறான மருந்து கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார். இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் நாய் இறந்து விட்டது. எனவே, நாயின் மரணத்திற்கான உண்மை காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை செய்யவும், மருத்துவர் மீது விசாரணை நடத்தவும்  உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், இதுகுறித்து விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கும், கால்நடைத் துறை இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.


Tags :
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதி...