×

ஆட்டோவில் பயணி தவறவிட்ட 50 சவரன் போலீசில் ஒப்படைப்பு

பல்லாவரம்: குரோம்பேட்டையை சேர்ந்தவர் பால் பிரைட் (55), இவரது மகள் திருமணம் நேற்று மாலை சர்ச்சில் நடைபெற்றது. தொடர்ந்து பல்லாவரத்தில்  திருமண வரவேற்பு நடைபெற இருந்தது. இதனிடையே, பால் டிரைட் சர்ச்சியில் இருந்து ஆட்டோ ஒன்றில் தனது வீட்டிற்கு சென்றார். அப்போது, மணப்பெண்ணின் 50 சவரன் நகைகள் வைத்திருந்த பையை ஆட்டோவிலேயே மறந்து சென்றார். பின்னர் இதுகுறித்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் நகையை தவறவிட்ட ஆட்டோவை தேடி வந்தனர். இந்நிலையில், ஆட்டோவில் ஒரு பை இருப்பதை பார்த்த டிரைவர் சரவணகுமார் (30), அதை குரோம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் அதனை பால் பிரைட்டிடம் ஒப்படைத்தனர்.  மேலும், நேர்மையாக நடந்துகொண்ட ஆட்டோ டிரைவர் சரவணகுமாரை பாராட்டினர்.

Tags : shaving police ,passenger ,
× RELATED திருவொற்றியூரில் ரூ.60 லட்சம்...