×

குலசேகரன்பட்டினத்தில் பெண்ணிடம் 7பவுன் பறிப்பு

உடன்குடி, ஜன.29: குலசேகரன்பட்டினம் முப்புடாதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுடலை மனைவி சொர்ணம்(55). சுடலை குலசேகரன்பட்டினம் பஸ் நிறுத்தத்தில் குளிர்பான கடை நடத்தி வருகிறார். சொர்ணம் கணவருக்கு உதவியாக கடைக்கு சென்று வேலைகளை செய்து விட்டு வீடு திரும்புவார். நேற்று முன்தினம் காலை கடையில் வேலையை முடித்துவிட்டு கீழத்தெரு அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சொர்ணம் அணிந்திருந்த 7பவுன் தாலிச்செயினை பறித்துச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.2லட்சம் ஆகும்.  இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் சப்இன்ஸ்பெக்டர் முனியாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Kulasekaranpattinam ,
× RELATED குலசை கோயிலில் முத்தாரம்மன் சப்பர வீதியுலா