×

விளாத்திகுளம், சாயர்புரம் அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் தொழிலாளி பரிதாப பலி

விளாத்திகுளம், ஜன.29: விளாத்திகுளம், சாயர்புரம் அருகே தண்ணீரில் மூழ்கி வாலிபர், தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தனர். விளாத்திகுளம் அருகேயுள்ள சித்தவநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கோபி மகன் மணிகண்டன்(18). இவர் கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் ஊரில் உள்ள கண்மாயில் குளிக்க சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்ைல. இதனால் அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். நேற்று கண்மாயில் மணிகண்டனின் உடல் மிதந்தது. தகவலறிந்த விளாத்திகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரல்: சாயர்புரம் அருகேயுள்ள நடுவக்குறிச்சி சேர்ந்த மணி மகன் செல்வராஜ்(41). இவர் நேற்று காலை சிவத்தையாபுரம் சாலையில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த சாயர்புரம் போலீசார் செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீரில் மூழ்கி இறந்த செல்வராஜிக்கு குணசீலி என்ற மனைவியும் மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

Tags : youth worker ,pond ,Vilathikulam ,Sayarpuram ,
× RELATED படர்தாமரை உடலுக்கு நாசம்; ஆகாயத்தாமரை...