×

தென்காசி மலையான் தெரு தங்கம்மன் ேகாயில் முன் மண்டபம் திறப்பு

தென்காசி, ஜன. 29:  தென்காசி நகராட்சி மலையான் தெருவில் தேவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட தங்கம்மன் கோயில், சுடலை மாடசுவாமி கோயிலின் முன் மண்டபத்தை தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கோயில் தர்மகர்த்தா  ரத்தினம் முன்னிலையில் திமுக மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவர் அய்யாத்துரை பாண்டியன் திறந்து வைத்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு  அன்ன தானம் வழங்கினார். முன்னதாக மலையான் தெருவில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் திமுக தலைமைப் பொதுக்குழு உறுப்பினர்கள் லிங்கராஜ், சக்தி, காசிதர்மம் துரை, முன்னாள் மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் இஞ்சி முகம்மது இஸ்மாயில்,  நகர செயலாளர் சொக்கலிங்கம், முன்னாள் மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் முத்துக்குமார், சுரண்டை பேரூர் துணை செயலாளர் பூல் பாண்டியன், ஓய்வுபெற்ற
எஸ்ஐ பழனிசாமி, முன்னாள் கவுன்சிலர் திருமலைக்குமார், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற கடையநல்லூர்  ஒன்றிய செயலாளர் காளிராஜ் பாண்டியன், தில்லை, பேச்சிமுத்து, வீ.கே.புதூர் கேப்ரியல், சாமித்துரை, பார்வர்டு பிளாக் கணேசன்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Hall opening ,Tenkasi Malayan Street Thangamman Temple ,
× RELATED தஞ்சையில் தம்பி விலாஸ், சமுத்ரா ஹால் திறப்பு விழா