×

விவாகரத்தான மனைவி தர்ணா

இளம்பிள்ளை, ஜன.29: சேலம் மாவட்டம், காகாபாளையம் அருகே வேலாயுதசாமி கோயில் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (45). இவர் ஆட்டையாம்பட்டி பகுதியில் கால்நடை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அந்தியூர் பகுதியை சேர்ந்த இளமதி (42), என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இளமதி சித்தர்கோயில் அருகே கொத்தனுார் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து, நான்கு ஆண்டுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்றார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த 2013ம் ஆண்டு விவகாரத்து கோரி, மாதேஸ்வரன் சேலம் குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை ஏற்ற நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு விவாகரத்து வழங்கியது. இதை எதிர்த்து இளமதி சேலம் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இது, நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கணவருடன் சேர்ந்து வைக்கக்கோரி, காகாபாளையம் பகுதியில் உள்ள கணவர் மாதேஸ்வரன் வீட்டு முன், நேற்று முன்தினம் இரவு இளமதி தர்ணாவில் ஈடுபட்டார். இதனை அறிந்த மகுடஞ்சாவடி போலீசார் மற்றும் சேலம் பெண்கள் உதவி மையத்தினர், நேற்று சம்பவ இடத்திற்கு சென்று, இளமதியை சமாதானம் செய்து, ஈரோடு பெண்கள் காப்பகத்திற்கு அழைத்து சென்று அவருக்கு ஆலோசனை வழங்கினர்.

Tags : Tarna ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...