×

சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைது

நல்லம்பள்ளி, ஜன.29: நல்லம்பள்ளி அடுத்துள்ள கடுக்காய்பட்டியான் கோட்டாய் பகுதியை சேர்ந்தவர் முத்து (23). கூலி தொழிலாளி. இவருக்கு ரம்யா (20) என்ற மனைவியும், தனுஸ்ரீ (1) என்ற குழந்தையும் உள்ளனர். இந்நிலையில, அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை (45) என்பவரது மகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 24ம் தேதி காணவில்லை. சிறுமியை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அண்ணாமலை தொப்பூர் போலீசில் புகார் அளித்தார். கூலி தொழிலாளி முத்து, கடத்தி சென்றது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவரை கைது செய்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். முத்து மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags : kidnapper ,
× RELATED சிறுமி கடத்தல் வாலிபர் போக்சோவில் கைது