×

குலசேகரத்தில் பரபரப்பு ஓடும் பஸ்சில் செல்போன் திருடிய டிப்டாப் பெண்கள்

குலசேகரம், ஜன.29: குலசேகரத்தில்  இருந்து அழகியமண்டபம், திங்கள்நகர் வழியாக குளச்சல் செல்லும் தடம் எண் 332  பஸ் நேற்று பகல் 12 மணியளவில் குலசேகரம் பஸ் நிலையத்தில் இருந்து  புறப்பட்டது. நேற்று முகூர்த்த நாள் என்பதால் பஸ்சில் ஏராளமான பயணிகள்  இருந்தனர். அப்போது முன்பக்கம் பெண்கள் அமரும் பகுதியில் சுமார் 35 வயது  மதிக்கத்தக்க 2 இளம் பெண்கள் இருந்தனர். அதிக மேக்கப், நவநாகரீக உடையில் இருந்தனர்.

இந்த  நிலையில் பஸ்சில் பயணம் செய்த 2 பேர் தங்களது செல்போன் மற்றும் பேக்கை  காணவில்லை என கூச்சலிட்டனர். இதனால் பஸ்சில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது  இந்த 2 பெண்களின் நடவடிக்கையில் வித்தியாசம் தெரிந்தததால் சந்தேகம் அடைந்த  சக பயணிகள் அந்த பெண்களின் பேக்குகளை சோதனையிட்டனர். அப்போது அதில், மாயமான  பேக் மற்றும் செல்போன் இருந்தது.

இதையடுத்து டிரைவர் பஸ்சை  செருப்பாலூர் பகுதியில் நிறுத்தினார். அப்போது சக பயணிகள் அந்த 2  பெண்களையும் சரமாரியாக தாக்கினர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது.  இதையடுத்து பஸ்சில் இருந்து இறங்கி இருவரும் சானல்கரை வழியாக ஓட்டம்  பிடித்தனர். அப்போது திருடன் திருடன் என கத்தியதால் அங்கு ஏராளமானோர்  திரண்டனர். அவர்கள் அந்த பெண்ணைகளை துரத்தி சென்றனர். இதற்கிடையே  திருட்டுபோன பொருட்கள் கிடைத்துவிட்டதால் பஸ் புறப்பட்டு  சென்றது.

இது குறித்து குலசேகரம் போலீசுக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து கல்லடிமாமூடு பகுதியில் வைத்து 2  பெண்களையும் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் நாகர்கோவில்  ஒழுகினசேரியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. ஆனால் அவர் மீது புகார்  கொடுக்க யாரும் இல்லாததால் போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.  இந்த சம்பவம் அந்த பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : women ,Diptop ,Kulasekara ,
× RELATED தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் 2 பெண்கள் கைது