×

பிஎஸ்என்எல் லேன்ட்லைன் மறு இணைப்பு மேளா

நாகர்கோவில், ஜன.29: நாகர்கோவில் பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஏற்கனவே லேன்ட் லைன் இணைப்புகளைப் பெற்று தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ள நாகர்கோவில் தொலைபேசி நிலைய பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்கள் மீண்டும் பி.எஸ்.என்.எல் உடன் இணைந்து இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளும் வகையில்  சிறப்பு மறு இணைப்பு மேளா  நடத்தப்படுகிறது. நாகர்கோவில் கோர்ட் ரோட்டில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தில் நாளை (30ம் தேதி) சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.

தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ துண்டிக்கப்பட்ட தொலைபேசி எண்களுக்கு பாக்கி தொகை இருந்தால், பொருத்தமான சலுகை முறையில் தள்ளுபடி பெற்றுக் கொண்டு, மறு இணைப்பு பெறுவதற்கோ, பாக்கி தொகையைச்செலுத்தி கணக்கை முடித்து கொள்வதற்கோ இந்த மேளாவில் பங்கேற்று பயன் பெறலாம். பாக்கி தொகை தீர்வு செய்யப்படவில்லை எனில் உரிய சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வாடிக்கையாளர்கள் விரும்பும் பட்சத்தில் புதிதாக அறிமுகப்படுத்தபட்டுள்ள லேண்ட் லைன் திட்டம் 149ல் மறு இணைப்பும் பெற்று கொள்ளலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...