சாத்தூர், ஜன. 29: சாத்தூர் வடக்கு ரத வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரசாரம் மற்றும் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் நகர செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுப்பாராஜ், சுந்தரபாண்டியன், தெய்வானை முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், மாநிலக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாத்தூர் நகரம் மற்றும் ஒன்றியம் சார்பில் கட்சி நிதியாக ரூ.5 லட்சத்தை ஜி.ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். நகர் சாத்தூர் நகர்குழு உறுப்பினர் சீனிவாசன் நன்றியுரை வழங்கினார்.