×

தடகள போட்டியில் சென்னை அணி சாம்பியன்

சிவகாசி, ஜன. 29: சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான தடகள போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெற்றன. இதில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் தனலட்சுமி 11 வினாடி 48 மைக்ரோ வினாடியில் ஓடி முந்தைய சாதனையை முறியடித்தார். பெண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் மெர்லி 1.77 மீட்டர் உயரம் தாண்டி வெற்றி பெற்றார். 17 வயது பிரிவில் 2000 மீட்டர் ஓட்ட போட்டியில் வால்டர் 5 நிமிடம் 47 வினாடி 67 மைக்ரோ வினாடியில் ஓடி முந்தைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார்.
ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்ட போட்டியில் இலக்கியதாசன் 49 வினாடிகளில் ஓடி புதிய சாதனை படைத்தார்.

20 வயது பெண்களுக்கான தடியூன்றி தாண்டுதல் போட்டியில் பவித்ரா 3.30 மீட்டர் என்ற புதிய சாதனை படைத்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்று தேர்வானவர்கள் அசாமில் நடைபெறவுள்ள தேசிய போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். சென்னை புனித ஜோசப் விளையாட்டு கிளப் அணியினர் சீனியர் மற்றும் ஜூனியர் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையை கைப்பற்றினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், கோப்பை, சான்றிதழ் வழங்க பட்டது. இந்நிகழ்ச்சியில் மெப்கோ பொறியியல் கல்லூரி முதல்வர் அறிவழகன், மாநில அதலெட்டிக் சங்க செயலாளர் லதா, மாவட்ட அத்லெட்டிக் சங்க சங்க செயலாளர் சிவராஜ் கலந்து கொண்டனர்.

Tags : Chennai ,team champion ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...