×

மயானத்திற்கு பாதை இல்லை ஓடையில் பிணத்தை எடுத்துச் செல்லும் மக்கள் ராஜபாளையம் அருகே அவலம்

ராஜபாளையம், ஜன. 29: ராஜபாளையம் அருகே இளந்திரை கொண்டான் பகுதியில் இறந்தவர்களை மயானத்திற்கு கொண்டு செல்ல வழியில்லாததால் தண்ணீர் ஓடும் ஓடை வழியாக எடுத்துச் செல்லும் அவலநிலை தொடர்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள இளந்திரை கொண்டான் கிராமத்தில் சுமார் 300 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு இறந்தவர்களின் உடலை தகனம் செய்யும் மயானம் ஓடைப்பாதையில் உள்ளது. கடந்த வாரத்திற்கு முன் பெய்த மழையால் இளந்திரை கொண்டான் கண்மாய் நிரம்பி மயானம் செல்லும் பாதையான ஓடைப்பகுதிக்குள் தண்ணீர் சூழ்ந்துள்ளது.நேற்று இறந்தவரின் உடலை மயானக்கரைக்கு எடுத்துச் செல்ல முடியாமல் கிராமமக்கள் அவதிப்பட்டனர். ஓடை வழியே நீரில் இறங்கி பிணத்தை கொண்டு சென்றனர். மழைக்காலங்களில் தொடர்ந்து இது போன்ற நிலை தொடர்வதாக இளந்திரை கொண்டான் மக்கள் தெரிவித்தனர். எனவே, மயானக்கரைக்கு செல்லும் பாதையில் தண்ணீர் சூழாமல் வழியை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : cemetery ,stream ,Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தீவிர...