×

சிறுவர்கள் கண்மாயில் விளையாட கூடாது

சிவகங்கை, ஜன. 29: சிறுவர், சிறுமிகளை கண்மாய், குளங்களில் விளையாட அனுமதிக்க கூடாது என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை மற்றும் அதனைத் தொடர்ந்து பெய்துள்ள தொடர் மழை காரணமாக பெருவாரியான கண்மாய்கள் மற்றும் ஊருணிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. எனவே பொதுமக்கள் கண்மாய் மற்றும் ஊருணிகளை பயன்படுத்தும் போது அதிக கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் பயன்படுத்த வேண்டும். கண்மாய்கள் மற்றும் ஊருணிகளில் சிறுவர், சிறுமியர் விளையாடுவதை தவிர்க்க பெற்றோர்கள் மற்றும் பெரியார்கள் அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். சிறுவர், சிறுமியர்  நீர்நிலைகளில் குளிக்கச் செல்லும் போது பெற்றோர்கள் கண்காணிப்பின்றி அனுப்பக் கூடாது. அவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர்கள் அவர்களை தொடர்ந்து  கண்காணிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.  

Tags : Boys ,
× RELATED மஞ்சும்மல் பாய்ஸ் ரூ.200 கோடி வசூல்