×

பெண் சாவில் சந்தேகம் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

கமுதி, ஜன.29: கமுதி அருகே பெண் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கமுதி அருகே அபிராமத்தில் வசித்து வருபவர் வீரணன். இவரது மனைவி சிவா(26). இவர்களுக்கு கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் அபிராமத்தில் தனது வீட்டில் சிவா தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கணவர் வீரணன் கொடுத்த புகாரின் பேரில், அபிராமம் போலீசார் குடும்ப பிரச்னை காரணமாக தூக்குப்போட்டு இறந்ததாக வழக்குப்பதிவு செய்து கமுதி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு சிவாவின் உடலை அனுப்பி வைத்தனர்.

இருவருக்கும் திருமணமாகி 7 வருடங்கள் ஆகவில்லை என்பதால், கோட்டாட்சியர் தங்கவேலு விசாரணை செய்து வந்தார். இந்நிலையில் இறந்த பெண்ணின் உறவினர்கள் தற்கொலையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறி, கமுதியில் இருந்து மதுரை செல்லும் சாலையில் எட்டுக் கண் பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சென்ற அபிரமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்சி ராணி முறையாக விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பஸ் மறியல் கைவிடப்பட்டது. இருப்பினும் முறையான விசாரணை நடத்த வேண்டுமென்று இறந்த சிவாவின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : relatives ,death ,
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு