×

பக்தர்கள் வசதிக்காக கூடுதல் டவுன் பஸ் பொதுமக்கள் வேண்டுகோள்

ஆர்.எஸ்.மங்கலம், ஜன.29: ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து நயினார்கோவிலுக்கு கூடுதல் டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள் பிரசித்தி பெற்ற நயினார்கோவிலில் உள்ள நாகநாத சுவாமியை தரிசனம் செய்ய செல்வார்கள். எனவே பக்தர்களின் வசதிக்காக ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து அரியான்கோட்டை, பணிதிவயல் நகரம் வழியாக நயினார்கோவிலுக்கு கூடுதலாக டவுன் பஸ் இயக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் கூறுகையில், கூடுதல் பஸ்கள் இல்லாத காரணத்தால் இப்பகுதியில் உள்ள நாங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகுகின்றோம். ஆர்.எஸ்.மங்கலம். செட்டியமடை, புலி வீர தேவன் கோட்டை, குயவனேந்தல், அரியான்கோட்டை, பணிதிவயல் போன்ற கிராமங்களில் உள்ள நாங்கள் சரியான பஸ் வசதி இல்லாத காரணத்தால் இளையான்குடி, வழியாக பரமக்குடி

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...