×

லாரி, டிராக்டரில் டூவீலர்கள் மோதி இரண்டு பேர் பலி

தொண்டி, ஜன.29: தொண்டி அருகே இரண்டு இடங்களில் ரோட்டில் நின்ற லாரி மற்றும் டிராகடர் மீது டூவீலர்கள் மோதியதில் 2 பேர் பலியாகினர். தொண்டி அருகே பாண்டுகுடியை சேர்ந்தவர் முருகாணந்தம்(49). இவர் நேற்று முன்தினம் இரவு கடைவீதிக்கு சென்று விட்டு டூவீலரில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது பாண்டுகுடி ரோட்டின் ஓரம் நிறுத்தி வைத்திருந்த டிராக்டரில் மோதியுள்ளார். பலத்த காயம் அடை ந்த அவரை திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே இறந்து விட்டார்.

இதுபோல் தொண்டி அருகே நத்தகோட்டையை சேர்ந்தவர் சுந்தர்ராஜன்(39). இவர் நேற்று முன்தினம் இரவு டுவீலரில் வெள்ளையபுரம் சென்று விட்டு வீடு திரும்பினார் அப்போது இருளான பகுதியில் அளவுக்கு அதிகமாக வைக்கோல் ஏற்றி நின்ற லாரியின் பின்னால் கட்டியிருந்த கம்பில் மோதி சம்பவ இட்திலேயே பலியானார். இரண்டு விபத்துகள் குறித்து தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது