பந்தலூர்,ஜன.29: பந்தலூர் அருகே வெள்ளேரி கிராமத்தில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு குளித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
பந்தலூர் தாலுக்கா வெள்ளேரி கிராமத்தில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது. கோவை ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா வேளாண்மை கல்லுரியில் 4ம் ஆண்டு பயிலும் மாணவன் நவீன்குமார் தமிழ் நாடு வேளாண்மை துறையின் ஆத்மா திட்டத்துடன் இணைந்து அங்குள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தேனி வளர்ப்பு குறித்து பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கமும் மற்றும் பயன்கள்,செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கமளித்தார். அப்பகுதி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.