×

விவசாயிகள் கோரிக்கை மன்னார்குடி அருகே ஆடு மேய்க்க சென்றவர் வாய்க்காலில் சடலமாக மீட்பு சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார்

மன்னார்குடி, ஜன. 28: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர காவல் சரகத்திற்குட்பட்ட மெய்பழ த் தோட்டம் கிராமத்தை  சேர்ந்தவர் சுரேஷ் (30). இவருக்கு திருமணமாகி சித்ரா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் ரமேஷ் தனது வீட்டில் சாப்பிட்டு விட்டு ஆடு மேய்க்க செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றவர் இரவு வரை வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரதும் மனைவியும் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடியும் சுரேஷ் குறித்து தகவல் இல்லை. இந்நிலையில், மெய்பழத்தோட்டம் அருகே உள்ள திருமேனி ஏரி வாய்க்கா லில் சுரேஷ் சடலமாக மிதப்பதாக வந்த தகவலின் பேரில் மன்னார்குடி இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், டவுன் எஸ்ஐ முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனு ப்பி வைத்தனர். இதுகுறித்து அசேசம் விஏஓ ராஜ்மோகன் மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், சுரேஷ் இறப்பில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். இதையடுத்து போலீசார் தங்கள் விசாரணையை தீவிர படுத்தி உள்ளனர். மேலும் பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகே சுரேஷ் இறப்பு குறித்தான உண்மை நிலை தெரிய வரும் என போலீசார் தரப்பில் கூறபடுகிறது.

Tags : Relatives ,canal ,Mannargudi ,
× RELATED கீழ்பவானியில் தண்ணீர் எடுத்த லாரி பறிமுதல்