×

3 பள்ளிகளுக்கு விருது வழங்கல்

புதுக்கோட்டை, ஜன. 28: தமிழக அரசின் தொடக்க கல்வித்துறை சார்பில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கற்றல், கற்பித்தலில் மேம்பாடு, புதுமைகளை கையாளுதல், தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி, மாணவர் சேர்க்கை, போட்டிகளில் பங்கேற்பு, சுகாதாரம், அறிவியல் படைப்புகளை உருவாக்குதலில் புலமை உள்ளிட்டவற்றோடு பள்ளியின் போதுமான அளவுக்கு உள்கட்டமைப்பு வசதியை கொண்டுள்ள தலா 3 பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் சிறந்த பள்ளிக்கான விருது அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2018-19ம் ஆண்டுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் தட்டாமனைப்பட்டி மற்றும் குன்றாண்டார்கோவில் ஒன்றியம் ஒடுக்கூர் ஆகிய அரசு நடுநிலைப்பள்ளிகள் மற்றும் திருவரங்குளம் ஒன்றியம் எம்.ராசியமங்கலம் அரசு தொடக்கப்பள்ளிக்கு விருது வழங்கப்பட்டது. சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட இந்த விருதுகளை தேர்வு செய்யப்பட்ட 3 பள்ளிகளுக்கு புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் உமா மகேஸ்வரி நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்கள் பங்கேற்றனர்.

Tags : schools ,
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...