×

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து நாட்டுப்படகு மூலம் கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் தொழில்

அறந்தாங்கி, ஜன. 28: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து நாட்டுப்படகு மூலம் கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களில் கிளிட்டாஸ், ஆரோக்கியம், சேசுப்பிள்ளை, சன்ராஜ், பிராங்கிளின், கிரீன்சன், ஜான்சன், பாக்கியராஜ் ஆகிய 8 பேர் கடந்த 23ம் தேதி தொழிலுக்கு சென்று விட்டு வலைகளை காரில் ஏற்றி கொண்டு ஊருக்கு திரும்பினர். கோட்டைப்பட்டினம் அருகே ஓடாவிமடம் அருகே சென்றபோது கார் மீது எதிரே வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் கிளிட்டாஸ், ஆரோக்கியம், சேசுப்பிள்ளை ஆகிய 3 மீனவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சன்ராஜ் உள்ளிட்ட 5 பேரும் படுகாயமடைந்தனர். இவர்களில் சன்ராஜ் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுhரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் சன்ராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார். சன்ராஜுடன் சேர்த்து கோட்டைப்பட்டினம் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Fishermen ,sea ,Ramanathapuram district ,Vedaranyam ,Kodiakkarai ,
× RELATED பா.ஜ நிர்வாகிகளை விரட்டியடித்த மீனவர்கள்