×

கலெக்டருக்கு மனு நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பாளர் மரணம் பணப்பயன் கேட்டு ஓராண்டாக அலையும் குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு

மயிலாடுதுறை, ஜன. 28: மயிலாடுதுறை அருகே மொழையூர் மேலவெளியை சேர்ந்த மகாலிங்கம் மகன் ரவி. மொழையூர் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இவர் 2019ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி இறந்து விட்டார். இதையடுத்து அவரது மறைவுக்கு பிறகு அரசின் பணப்பயன் தொகைக்காக அவரது குடும்பத்தினர் விண்ணப்பம் அளித்திருந்தனர். ஆனால் ரவி குடும்பத்தினருக்கு சேர வேண்டிய பணப்பயன் கிடைக்கவில்லை. இதுகுறித்து மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்று அவரது குடும்பத்தினர் கேட்டதற்கு நாங்கள் இதற்கான பேப்பரை அனுப்பி 3 மாதமாகி விட்டது. அரசிடமிருந்து பதில் வரவில்லையென கூறி விட்டனர். இதுகுறித்து பலமுறை கேட்டும் எந்த பதிலும், நடவடிக்கையும் இல்லை. இதனால் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் ரவி சகோதரர் பாரதிமோகன் மனு அளித்தார்.

Tags : Collector ,wanderer ,Office ,death ,reservoir tank keeper ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...