×

காளையார்கோவிலில் தைத்திருவிழா தேரோட்டம்

காளையார்கோவில், ஜன.28:  காளையார்கோவிலில் உள்ள சொர்ணகாளீஸ்வரர் கோவிலில் கடந்த 19ம் தேதி தைப்பூசம் உற்சவத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 8 நாட்கள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. நேற்று காலை 9.30 மணியளவில் தேரோடும் வீதி வழியாக இரண்டு தேர்கள் இழுக்கப்பட்டன. பெரிய தேரில் சொர்ண காளீஸ்வரர் காட்சியளிக்க ஆண்களும், சின்னத் தேரில் சொர்ணவள்ளி அம்மன் காட்சியளிக்க பெண்களும் இழுத்து வந்தார்கள்.

ஓம் நமச்சிவாயா என்ற கோஷத்துடன் தேர்பவனி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். விழா ஏற்பாட்டை தேவஸ்தான கண்காணிப்பாளர் பாலசரவணன், ஸ்தாணிகர் சிவ  காளீஸ்வரர் குருக்கள், இளங்கோ மேலாளர் சிவகங்கை சமஸ்தானம், நகரத்தார்கள் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தார்கள்.

Tags : Theater Festival ,Kaliningrad ,
× RELATED போக்குவரத்து நெருக்கடியை குறைக்க...