×

அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம்

ராமநாதபுரம், ஜன.28:  ராமநாதபுரம் அருகே உள்ள பழங்குளம் கிராமத்தில் உள்ள பேரைச்சாத்த அய்யனார் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 25ம் தேதி யாக சாலை பூஜைகள் தொடங்கி, நேற்று முன்தினம் 2ம் நாள் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. விழாவின் நிறைவாக நேற்று காலை சூர்ய பூஜை, கோபூஜைகளுடன் யாக சாலை பூஜைகள் தொடங்கி தீபாராதனையுடன் கடம்புறப்பாடு நடைபெற்றது.
காலையில் பேரைச்சாத்த அய்யனார், காளியம்மன், கருப்பணசாமி, குறத்தி அம்மன் ஆகிய கோபுரங்களில் உள்ள கலசங்களில் வேத மந்திரங்கள் முழங்க புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Tags : Ayyanar Temple ,
× RELATED அமைச்சர் ரகுபதி பேச்சு திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்