ஒட்டன்சத்திரம், ஜன.28: ஒட்டன்சத்திரம் வடக்கு ஒன்றியம் வலையபட்டி, இடையகோட்டை வெரியப்பூர் பகுதிகளில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அர.சக்கரபாணி தலைமை வகித்தார்.ஒன்றிய செயலாளர் ஜோதீசுவரன், ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வி, செல்லமுத்து, ஜென்சி செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அதிமுவை நிராகரிப்போம் என்ற கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.