×

பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர்

திண்டுக்கல், ஜன.28: பழநி ரோடு பைபாஸ் சாலையில், கழிவுநீர் ஆறாக ஓடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். திண்டுக்கல்-பழநி ரோட்டில் உள்ள பைபாஸ் அருகே சாலையில், சாக்கடை கால்வாயில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை மாநகராட்சி நிர்வாகம் சரி செய்யாமல், அலட்சியமாக உள்ளது. இதனால் பல இடங்களில், கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்பது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நேற்று பழநி ரோட்டில் உள்ள பைபாஸில் பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ரோட்டில் ஆறாக ஓடுகிறது. இதனால் பழநி தைப்பூசத் திருவிழாவிற்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் வெறுங்காலுடன் கழிவுநீரை மிதித்துக் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பழநி ரோடு பைபாஸ் சர்வீஸ் ரோட்டில் அருகே சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி, பழநி ரோடு சாலையில் ஆறாக ஓடியது. அப்போது, துர்நாற்றம் வீசியதால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்

Tags : road ,river ,pilgrims ,
× RELATED கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது