×

எஸ்.ஐ.க்கு கலெக்டர் பரிசு

வத்தலக்குண்டு, ஜன.28: நிலக்கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் கண்ணா காந்தி. இவர் கடந்த ஆறு மாத காலத்திற்குள் 16 திருட்டு குற்றவாளிகளை கைது செய்து 70 பவுன் தங்க நகை , ரூ.2 லட்சம் பணம், ஒரு கார், 8 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை திருடர்களிடமிருந்து மீட்டுள்ளார். இதை பாராட்டி திண்டுக்கல்லில் நடந்த குடியரசு தினவிழாவில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கண்ணா காந்திக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

Tags : Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...