×

ரயில் நிலையத்தில் தொடர்ந்து 6 முறை ஒலித்த சைரனால் பரபரப்பு

ஈரோடு, ஜன.28: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் உள்ள சைரன் தொடர்ந்து 6 முறை ஒலித்ததால் நேற்று மாலை பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் ரயில் தடம் புரண்டால் அல்லது விபத்து மற்றும் அவசர தேவைகளின் போது, ரயில்வே தொழிலாளர்கள், மருத்துவ பணியாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரையும் தயார்படுத்துவதற்காக சைரன் ஒலிப்பது வழக்கம். நேற்று மாலை திடீரென தொடர்ச்சியாக நான்கு முறை சைரன் ஒலித்தது. இதனால், ரயில்வே தொழிலாளர்கள், ரயில் பயணிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அதிர்ச்சி அடைந்தனர். மீண்டும் சிறிது நேரம் கழித்து இரண்டு முறை சைரன் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், மேற்கூரைகளை சரி செய்யும் போது தவறுதலாக சைரன் பகுதியில் தண்ணீர் பட்டதால் தானாகவே தொடர்ந்து ஒலித்ததாக கூறினர்.

Tags : train station ,
× RELATED இரு சக்கர வாகனத்தில் சென்றபோது...