×

அரசு மருத்துவமனை காவலாளியை தாக்கிய 3 பேர் கைது

கடலூர், ஜன. 28: பண்ருட்டி அருகே உள்ள திருவதிகையை சேர்ந்தவர் மணிகண்டன்(40). இவர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று கடலூர் மார்க்கெட் பகுதியை சேர்ந்த ராமசாமி(31) என்பவர், தனது மனைவி ரம்யாவுக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும், அதனால் குழந்தையை பார்க்க வார்டுக்குள் செல்ல அனுமதிக்கும்படி மணிகண்டனிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு மணிகண்டன், பார்வை நேரம் முடிந்து விட்டது, அதனால் அனுமதிக்க முடியாது என கூறினார். இதில் ஆத்திரமடைந்த ராமசாமி, குப்பங்குளத்தை சேர்ந்த விக்ரம், ராக்கி ஆகியோருடன் சேர்ந்து மணிகண்டனை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமசாமி, விக்ரம், ராக்கி ஆகியோரை கைது செய்தனர்.

அடையாளம் தெரியாத ஆண் சடலம்
திட்டக்குடி, ஜன. 28:  திட்டக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக திட்டக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் சென்று, இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்த நபரின் இடது பக்க மார்பில் விஜயகாந்த் படம் பச்சை குத்தப்பட்டிருந்தது. இது குறித்து திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்