×

உடன்குடி, சாத்தான்குளம் பகுதிகளில் 30ம் தேதி மின்தடை

உடன்குடி, ஜன.28: திருச்செந்தூர் மின்விநியோக பொறியாளர் கருப்பசாமி விடுத்துள்ள செய்திகுறிப்பு: சாத்தான்குளம் உப மின்நிலையத்தில் வரும் 30ம்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறயிருப்பதால் சாத்தான்குளம், முதலூர், கருங்கடல், வெங்கடேசபுரம் பகுதியிலும், நாசரேத் உபமின் நிலையத்தைச் சார்ந்த நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை பகுதியிலும், செம்மறிக்குளம் உபமின்நிலையத்தை சார்ந்த மெஞ்ஞானபுரம், அனைத்தலை, ராமசாமிபுரம், லட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை பகுதிகளிலும், பழனியப்பபுரம் உப மின்நிலையத்தைச் சார்ந்த மீரான்குளம், பழனியப்பபுரம், கட்டாரிமங்கலம், அம்பலசேரி, அறிவான்மொழி பகுதியிலும் காலை 8மணி முதல் 1மணி வரை மின்சாரம் இருக்காது.

இதுபோல் உடன்குடி உப மின்நிலையத்திலிருந்து செல்லும் 11கேவி பரமன்குறிச்சி, பிச்சிவிளை மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் 30ம்தேதி நடைபெறுகிறது. இதனால் பரமன்குறிச்சி, பிச்சிவிளை மின்பாதைகளிலிருந்து மின்னூட்டம் பெறும் பிச்சிவிளை, செட்டியாபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, மெய்யூர், பிறைகுடியிருப்பு, கடாச்சபுரம், அன்பின்நகரம் பகுதிகளில் காலை 8மணி முதல் 1மணி வரை மின்சாரம் இருக்காது. நடுவக்குறிச்சி உபமின்நிலையத்தைச் சார்ந்த நடுவக்குறிச்சி, தட்டார்மடம், புத்தன்தருவை. பூச்சிக்காடு, படுக்கப்பத்து, பெரியதாழை, ஒசரத்துகுடியிருப்பு, காந்திநகர், கொம்டிக்கோட்டை, சுண்டன்கோட்டை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம் பகுதியிலும் 30ம்தேதி காலை 9மணி முதல் மாலை 6மணி வரை மின்சாரம் இருக்காது என கூறியுள்ளார்.

Tags : areas ,Sathankulam ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...