×

பரமன்குறிச்சியில் காங். நிர்வாகிகள் கூட்டம் ஊர்வசி அமிர்தராஜ் பங்கேற்பு

உடன்குடி, ஜன.28:  உடன்குடி யூனியன் பரமன்குறிச்சியில் கிராம காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்களின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. வட்டார தலைவர் துரைராஜ்ஜோசப் தலைமை வகித்தார். மாநில மகிளா காங்கிரஸ் இணைசெயலர் அன்புராணி, திருச்செந்தூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் தனிஷ், பரமன்குறிச்சி கிராம காங்கிரஸ் தலைவர் மாயாண்டிதாஸ், குதிரைமொழி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கன்னிமுத்து, நகர காங்கிரஸ் தலைவர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் பங்கேற்று பேசும்போது, ‘பாஜ ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டதால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் போராடி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை அடக்க பாஜ அரசு முயற்சிக்கிறது. மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் அதிமுக அரசு நடைமுறைப்படுத்துகிறது. இதுகுறித்து கிராம காங்கிரஸ் கமிட்டியினர் மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும். கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றிக்கு பாடுபட வேண்டும்’ என்றார். தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்கு வர இருக்கும் ராகுல்காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, கிராம காங்கிரஸ் கமிட்டிகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டேவிட் பிரபாகர், மாநகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் எடிசன், நகர காங்கிரஸ் செயலர் ராமமூர்த்தி, வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெயராமன், வட்டார அமைப்பு சாரா தொழிலாளர் தலைவர் ஜெபராஜ், கிராம காங்கிரஸ் தலைவர்கள் சுப்பிரமணியன், ஸ்டாலின், ஜோசப், திருமணி, சாத்தான்குளம் யூனியன் கவுன்சிலர் சுதாகர் உட்பட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
   வைகுண்டம்: வைகுண்டம் அருகே பேட்மாநகரம், வெள்ளூர், ஆதிநாதபுரம், மளவராயநத்தம், ஆழ்வார்திருநகரி அருகே மளவராயநத்தம், ஆதிநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் சார்பில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும், ஏழைகளுக்கு இலவச வேஷ்டி, சேலை மற்றும் நலத்திட்ட உதவிகளை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ்  வழங்கினார். வெள்ளூரில் முத்துராமலிங்கத் தேவர், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சிகளில், மாநில செயலாளர் சிந்தியா வைலட்லில்லி, வட்டாரத் தலைவர் நல்லகண்ணு, பொருளாளர் சந்திரன், துணைத்தலைவர் அலங்காரபாண்டியன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன், வைகுண்டம் நகர செயலாளர் சித்திரை, மற்றும் நிர்வாகிகள் நவாப், அப்துல்காதர், எடிசன் பிரபாகரன், ஜெயக்கொடி, சிங்காரவேலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


Tags : Executives ,Paramankurichi ,Urvasi Amirtaraj ,
× RELATED மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் 16ம் தேதி நடக்கிறது