×

பயங்கர சத்தத்துடன் ஏடிஎம் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு: சிசிடிவி மூலம் ஆசாமிக்கு வலை

பெரம்பூர்: கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் நேற்று காலை திடீரென அலாரம் அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பியது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது ஏடிஎம்மின் முன்பக்க கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன. உடனடியாக அவர்கள் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஏடிஎம் இன்சார்ஜ் ஷெரிப்பாவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அங்கு வந்து ஒலித்து கொண்டிருந்த அலாரத்தை அணைத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், ஏடிஎம்மில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது, 2 நபர்கள் ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது ஏடிஎம் வெளியே நின்றிருந்த மர்ம நபர் அவர்களை வெளியே வரச்சொன்னார். பின்னர் கற்களை கொண்டு ஏடிஎம் கண்ணாடிகளை உடைத்தார். இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடிபோதையில் நடந்துகொண்டாரா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.

Tags : ATM ,CCTV ,Assamese ,
× RELATED ஏடிஎம் மையத்தில் கேட்பாரற்று கிடந்த...