×

திருச்செங்கோட்டில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

திருச்செங்கோடு, ஜன.26: மல்லூர் அம்மாபாளையம் ஏரிக்கரையை சேர்ந்தவர் பழனிவேல்(37). கூலி தொழிலாளி. இவருக்கு கலைவாணி(32) என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். பழனிவேல் நேற்று முன்தினம் சங்ககிரியை அடுத்துள்ள இருகாலூர் ஊத்துப்பாளையத்தில், இல்ல திருமண விழா நடந்தது. இதற்காக சீரியல் செட், வண்ண விளக்குகள் அமைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது இரும்பு குழாயை உயர்த்தி பிடித்தபோது மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் குழாய்பட்டது. இதில் மின்சாரம் தாக்கி பழனிவேல் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த மல்லசமுத்திரம் போலீசார், பழனிவேலின் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Tags : Tiruchengode ,
× RELATED சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு