×

ஜமீன்தார் வழங்கிய இடம் தனிநபருக்கு தாரைவார்ப்பு விஏஓ மீது நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் மனு

திருச்சி, ஜன.27: மணப்பாறை அடுத்த மருங்காபுரி தாலுகாவுக்குட்பட்ட அழகாபுரி, பழையபாளையம் பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். அவர்கள் அளித்த மனுவில், ‘பழைய பாளையம் கிராமத்தில் கடந்த 40 ஆண்டுக்கு முன் மருங்காபுரி ஜமீன்தார் 1.20 ஏக்கர் நிலத்தை எங்களுக்கு இலவசமாக வழங்கினார். அந்த இடத்தில் வீடு கட்டி, மின் இணைப்பு பெற்று, வீட்டு வரி, தண்ணீர் வரி 30 ஆண்டாக செலுத்தி குடும்பத்துடன் வசித்து வருகிறோம். இந்த இடத்துக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி பலமுறை மருங்காபுரி தாசில்தார் அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்து இதுவரை எந்த பதிலும் இல்லை.
ஆனால் இந்த இடத்தை அழகாபுரி விஏஓவாக பணிபுரிந்த பாத்திமாபானு என்பவர் எங்கள் ஊரை சேர்ந்த ஒருவருக்கு பட்டா மாற்றம் செய்து கொடுத்துள்ளார். எனவே அவர் மீது சட்ட ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பட்டாவை ரத்து செய்து, எங்கள் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தரவேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனர்.


Tags : VAO ,landlord ,
× RELATED பாஜவினர் மீது போலீசில் புகார்