×

மகாநந்திக்கு பால் அபிஷேகம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்ற 4 பேர் கைது

திருக்காட்டுப்பள்ளி, ஜன 27: திருக்காட்டுப்பள்ளி பகுதியில் நேற்று முன்தினம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணி சென்றனர். அப்போது நேதாஜி மார்கெட்டில் கண்டமங்கலம் காளியம்மன்கோயில் தெரு காந்தி மகன் சுந்தர் (21), பழமார்நேரி சாலையில் முத்துகிருஷ்ணன் மகன் மதனகோபால் (25), கண்டமங்கலம் மந்தை தெருவில் ராஜேந்திரன் மகன் நேருஜி(35) ஆகியோர் அரசினரால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் விற்பதும், விஷ்ணம்பேட்டை மயானம் அருகே முருகேசன் மகன் இன்பராஜ்(32) மதுபாட்டில்கள் விற்பதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து ஹான்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் மதுபாட்டில்களை கைபற்றி காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags : area ,Thirukattupalli ,
× RELATED வாட்டி வதைக்கும்...